Pages

Thursday, May 23, 2013

தமிழகம் முழுவதும் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வெளிப்படையாய் நடைபெறுவதாக பங்கேற்றோர் மகிழ்ச்சி

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அரசு மற்றும் நகராட்சி உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வில் 2 பேர் பணியிட மாறுதல் ஆணைகளை பெற்றனர். இந்த கலந்தாய்வு மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதாக இதில் பங்கேற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதேபோல், திருவள்ளூர், நெல்லை, நாகை உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.