ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான, ஆவணங்கள் வழங்க மறுத்த, மதுரை காமராஜ் பல்கலைகழகத்திற்கு, மாநில தகவல் ஆணையம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் நடந்த ஆசிரியர் பணி நியமனங்கள் குறித்த தகவல்களை கேட்டு, தகவல் உரிமைச் சட்டத்தில், பேராசிரியர் இஸ்மாயில் விண்ணப்பித்திருந்தார். பணி நியமன முறைகேடு குறித்து, மாநில தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பித்தார்.
விசாரணையில், அவருக்கு தகவலோ ஆவணங்களோ பல்கலை தரவில்லை. ஆவணங்கள் தராததை கண்டித்து, மாநில தகவல் ஆணையம், பல்கலைகழகத்திற்கு, 25 ஆயிரம் ரூபாய் ஆபராதம் விதித்துள்ளது. பத்து நாட்களுக்குள், உரிய ஆவணங்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த தொகையை, பல்கலைக்கழக பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து பிடித்தம் செய்து, உரிய அரசு கணக்கில் செலுத்தி, அந்த விவரத்தை, பல்கலை பதிவாளர், ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணையில், அவருக்கு தகவலோ ஆவணங்களோ பல்கலை தரவில்லை. ஆவணங்கள் தராததை கண்டித்து, மாநில தகவல் ஆணையம், பல்கலைகழகத்திற்கு, 25 ஆயிரம் ரூபாய் ஆபராதம் விதித்துள்ளது. பத்து நாட்களுக்குள், உரிய ஆவணங்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த தொகையை, பல்கலைக்கழக பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து பிடித்தம் செய்து, உரிய அரசு கணக்கில் செலுத்தி, அந்த விவரத்தை, பல்கலை பதிவாளர், ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
use efficiently use RTI Act-2005.For help Email to perumalthanagarajan@gmail.com
ReplyDelete