Pages

Tuesday, May 28, 2013

தலைமை ஆசிரியருக்கான இடமாறுதல் கலந்தாய்வு துவக்கம்

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் பதவி உயர்வு கவுன்சிலிங் இன்று துவங்குவதாக, திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (பொ) ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பு: திருச்சி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பஞ்சாயத்து யூனியன், நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடக்கும் இடங்கள் மற்றும் நேரம்:

திருச்சி மேலப்புதூர் புனித அன்னாள் நடுநிலைப்பள்ளியில், இன்று (28ம் தேதி) காலை, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு ஆணை வழங்குதல், மதியம், பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் ஒன்றியத்துக்குள் நடக்கிறது.

நாளை காலை, துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல், மதியம், துவக்கப்பள்ளி தலைமையாசிர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல் ஒன்றியத்துக்குள் நடக்கிறது.

மே 30ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர் மாறுதல் ஒன்றியத்துக்குள்ளும், மதியம், இடைநிலை ஆசிரியர் மாறுதல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் விட்டு மாவட்டத்திற்குள்ளும் நடக்கிறது. 31ம் தேதி காலை, இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் நடக்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.