சென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் வரும் அனைத்து கல்லூரிகளிலும், மாணவியரின் பாதுகாப்பிற்காக, விரைவில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
டில்லியில், நடந்த மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தையடுத்து, அனைத்து பல்கலைக்கழங்களும், கல்லூரிகளில், மாணவியருக்கு பிரத்யேகமாக செய்துள்ள பாதுகாப்பு விவரங்களை தெரிவிக்கும்படி, பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து பல்கலைக்கழகங்களும் தகவல்களை அனுப்பி வருகின்றன.
அதில், சென்னை பல்கலைக்கழகம் அனுப்பிய தகவலில், பல்கலைக்கழக நிர்வாகத்தில் வரும் அனைத்து இணைப்பு, உறுப்பு பல்கலைக்கழகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளதாகவும், கல்லூரி மாணவியரின் பாதுகாப்புக்கு என, பெண் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், சென்னை பல்கலைக்கழகம் அனுப்பிய தகவலில், பல்கலைக்கழக நிர்வாகத்தில் வரும் அனைத்து இணைப்பு, உறுப்பு பல்கலைக்கழகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளதாகவும், கல்லூரி மாணவியரின் பாதுகாப்புக்கு என, பெண் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.