Pages

Tuesday, April 9, 2013

விவேகானந்தர் பெயரில் 9 பல்கலைகளில் ஆய்வு மையம்

"ஒன்பது பல்கலைக்கழகங்களில், 25 லட்சம் ரூபாய் செலவில், சுவாமி விவேகானந்தர் உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, அன்னை தெரசா மகளிர் பல்கலை, அழகப்பா பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை மற்றும் திருவள்ளூவர் பல்கலை, ஆகிய, ஒன்பது பல்கலைக் கழகங்களில், சுவாமி விவேகானந்தரின் பெயரில் உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும்.

இந்த மையம், 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.