மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்ய உள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்த உள்ளது.
இந்த புதிய அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், அதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயன்பெறுவர். மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய அரமைச்சரவை இந்த புதிய அகவிலைப்படி உயர்வு குறித்து இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய அகவிலைப்படி உயர்வு 2013 ஜனவரி முதல் தேதியில் இருந்து தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 72 சதவீதமாக உயர்த்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இது 2012 ஜூலை முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.