Pages

Thursday, April 18, 2013

8% அகவிலைப் படி உயர்வு 22.04.2013 தேதிக்கு முன் அறிவிக்க வாய்ப்பில்லை என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி 2013 மாத முதல் வழங்க வேண்டிய 8% அகவிலைப்படி உயர்வானது, மத்திய நிதி அமைச்சரின் வருகைக்கு பின் அறிவிக்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கூடிய மத்திய அமைச்சரவையில் இதற்கான முடிவு எட்டப்படும் என்று அனைத்து தரப்பு ஊழியர்கள் மற்றும் ஊடகங்கள் எதிர்ப்பார்த்து "இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி உயர்வு அறிவிக்கப்படும்" என்றும் இன்னும் ஒரு சில ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் "மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது" என்றும் அறிவித்தன.
ஆனால் இறுதியில் மத்திய நிதி அமைச்சர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காததால் அகவிலைப்படி உயர்வு குறித்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது என்று மத்திய இணை அமைச்சர் அறிவித்தார். அப்பொழுது நிதி அமைச்சர் ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆகையால் நிதி அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் அகவிலைப்படி உயர்வு குறித்த முடிவு எடுக்கப்பட மாட்டாது என்பது தெளிவாக தெரிகிறது.
மத்திய நிதி அமைச்சர் தற்பொழுது ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து ஒரு வாரம் கனடா மற்றும் அமெரிக்க சுற்று பயணத்தை முடித்து ஏப்ரல் 22-ந் தேதி காலை டெல்லி திரும்புகிறார் என்று அரசு தகவல் தெரிவிக்கின்றன. எனவே மத்திய நிதி அமைச்சரின் வருகைக்கு பின்பே அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவு எட்டப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அகவிலைப்படி உயர்வு குறித்து மேலும் ஒரு வாரம் காலம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மத்திய ஊழியர்களின் கூட்டமைப்பு ஏப்ரல் 23 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.














No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.