Pages

Tuesday, March 12, 2013

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள்

மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் வகையில் 15 நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த ஆய்வகங்களில் ஆங்கில உச்சரிப்பு, பேச்சு, எழுதும் திறன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். அதே போல போதிய இடவசதி உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்கப்படும்.

மழலையர் பள்ளிகளில் வண்ண சீருடை: சென்னை மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் வழங்கப்படுவதைப் போல வண்ண சீருடைகளும், குழந்தைகளைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட காலணிகளும் வழங்கப்படும். மக்களின் வரவேற்பையும், தேவையையும் கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியில் மேலும் 10 புதிய மழலையர் பள்ளிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.