மணிப்பூரில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, கேள்வித்தாளுடன் விடைகளும் சேர்த்து அச்சடிக்கப்பட்ட தாள் கொடுக்கப்பட்டது. இதை தாமதமாக கண்டறிந்த அதிகாரிகள், தேர்வை ரத்து செய்ததுடன், வேறொரு நாளில் தள்ளிவைத்தனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், நேற்று முன்தினம், பிளஸ் 2, இன்ஜினியரிங் டிராயிங் தேர்வு நடந்தது. தேர்விற்கான, கேள்வித்தாளின் பின்புறத்தில், கேள்விகளுக்கான விடையும் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதை சற்று தாமதமாக பார்த்த மாணவர்கள், தேர்வு அதிகாரிகளிடம் கூறினர். உடனடியாக, கேள்வித்தாள்கள் திரும்பப் பெறப்பட்டு, தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதனால், மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், இன்ஜினியரிங் டிராயிங் தேர்வு, 25ம் தேதி தேர்வு நடக்கும், என, அறிவித்தனர். இதனால், மாணவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
"ஏற்கனவே இந்த தேர்வுக்காக தயாரான நிலையில், தேர்வுத்துறை செய்த குளறுபடியால், நாங்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டியுள்ளது" என்றனர்.
இதனால், மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், இன்ஜினியரிங் டிராயிங் தேர்வு, 25ம் தேதி தேர்வு நடக்கும், என, அறிவித்தனர். இதனால், மாணவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
"ஏற்கனவே இந்த தேர்வுக்காக தயாரான நிலையில், தேர்வுத்துறை செய்த குளறுபடியால், நாங்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டியுள்ளது" என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.