Pages

Monday, March 4, 2013

பிளஸ் 2: பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு வினாத்தாளில் இருந்து 29 கேள்விகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வின் தமிழ் முதல் தாளில் கடந்த ஆண்டு கேட்கப்பட்ட 29 கேள்விகள் மீண்டும் இந்தாண்டும் கேட்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கியது. முதல் தேர்வாக தமிழ் முதல் தாள் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. அப்போது கேள்வித் தாளை பெற்ற பல மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் தமிழ் முதல் தாளில் கேட்கப்பட்ட 29 கேள்விகள், இந்தாண்டும் திரும்பவும் கேட்கப்பட்டதுதான் காரணம்.

தமிழ் முதல் தாள் கேள்விகள் மொத்தம் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு மதிப்பெண் முதல் பத்து மதிப்பெண் வரையிலான கேள்விகளாக மொத்தம் 50 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுக்காக கேள்வித் தாள் தயாரிக்கும்போது கடந்தாண்டு கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகள் மீண்டும் கேட்கப்படும்.

ஆனால் இந்தாண்டு மொத்தம் 50 கேள்விகளில் 29 கேள்விகள் கடந்தாண்டு கேட்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் நூறு மதிப்பெண் கொண்ட கேள்வித் தாளில் 63 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கடந்தாண்டு கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

29 கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டு இருந்தாலும் கேள்வித் தாள் தேர்வுக்கு முன்னதாக வெளியாகவில்லை என்ற காரணத்தால் மறுதேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.