Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 19, 2013

    ஸ்ரீரங்கத்தில் 128 கோடியில் ஐ.ஐ.ஐ.டி. : முதல்வர் அறிவிப்பு

    திருச்சி, ஸ்ரீரங்கத்தில், 128 கோடி ரூபாய் செலவில், புதிதாக இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
    தமிழக அரசின் செய்திக்குறிப்பு: தமிழக அரசு, கடந்தாண்டு, 11 பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டன. நடப்பாண்டு, மூன்று பொறியியல் கல்லூரிகள், 10 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 11 பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    தமிழக மாணவர்களும் உலகத் தரத்திற்கு ஏற்ப, தொழில்நுட்ப கல்வி பெற வசதியாக, ஸ்ரீரங்கத்தில், புதிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படும். இந்நிறுவனம், மாநில, மத்திய மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் படி, 128 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    ஸ்ரீரங்கம், சேதுராப்பட்டியில், 56.37 ஏக்கரில், ஐ.ஐ.ஐ.டி., அமைக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி, இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்திற்கான கட்டடங்கள் கட்டும் வரை, திருவெறும்பூரில் உள்ள பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில், தற்காலிகமாக, 2013-14ம் கல்வியாண்டு முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இயங்கும்.

    தேனி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில், புதிதாக ஏழு பல தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டன. இந்த கல்லூரிகளுக்கு, சுற்றுசுவர் மற்றும் அணுகுசாலை வசதிகள் அமைக்க, ஒவ்வொரு கல்லூரிகளுக்கும், 31 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம், 2.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    No comments: