அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி ஆண்டு முடியும் தறுவாயில் கூட, புத்தகப் பை உட்பட, இலவச பொருட்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களிடம் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பஸ் பாஸ், சீருடை, நோட்டுப் புத்தகம், காலணி உட்பட, 16 இலவச பொருட்கள் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. ஆனால், 13 பொருட்களை மட்டுமே வழங்கி உள்ளனர்.
கல்வி ஆண்டு முடிய உள்ள நிலையில், ஆறு முதல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச வடிவியல் பெட்டி - ஜியோமெட்ரி பாக்ஸ், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு காலணி, ஒன்று முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்படவில்லை.
கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வி ஆண்டு முடிவதற்குள், எஞ்சிய இலவச பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு உத்தரவுக்கு பின், விடுமுறை நாட்களில் கூட, மாணவர்களை அழைத்து கொடுத்து விடுவோம்" என்றார்.
கல்வி ஆண்டு முடிய உள்ள நிலையில், ஆறு முதல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச வடிவியல் பெட்டி - ஜியோமெட்ரி பாக்ஸ், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு காலணி, ஒன்று முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்படவில்லை.
கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வி ஆண்டு முடிவதற்குள், எஞ்சிய இலவச பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு உத்தரவுக்கு பின், விடுமுறை நாட்களில் கூட, மாணவர்களை அழைத்து கொடுத்து விடுவோம்" என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.