Pages

Thursday, February 21, 2013

பள்ளிகளில் பாலியல் கல்வி?

டில்லி கற்பழிப்பு சம்பவத்தில், இளஞ்சிறார் ஒருவன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நீதிபதி வர்மா குழு சமர்பித்த அறிக்கையில், "நாடு முழுவதும் பாலியல் வன்முறை சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.
பழைய பள்ளிப் பாடத்திட்டத்தை சீரமைத்து, பாலியல் கல்வியை ஒரு பகுதியாக சேர்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது. அறிக்கை பற்றி கருத்து தெரிவித்த, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜூ, "நமது பள்ளிப்பாடத் திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். இது குறித்து பல்வேறு பாடத்திட்ட அமைப்பை கொண்ட மாநிலங்களிடம், மத்திய அரசு பேச வேண்டும் என்கின்றனர்.

தற்போது தனி பாடத்திட்டத்தை கொண்ட மாநிலங்களில், பாலியல் கல்வி குறித்த பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளோம். இது பற்றி என்.சி.ஆர்.டி., தலைவரிடமும் பேசியுள்ளோம். நீதிபதி வர்மா குழு அறிக்கை, ஒரு நபரின் முடிவு அல்ல. இத்திட்டம் குறித்து சமூகத்தின் எண்ணம், எந்த வயது மாணவர்களுக்கு பாலியல் கல்வி கற்பிப்பது போன்றவை குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.