காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் மூலம், தமிழக அரசு கடந்த 22 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது என்று ஜெயலலிதா சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
தமது 30 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இன்றுதான் மனநிறைவைத் தரும் விஷயம் நடந்துள்ளது. இது தமக்கும், தமிழக அரசுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
No comments:
Post a Comment