கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு மையம் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் லட்சுமி பிரபா வரவேற்றார்.
தமிழக ஐ.சி.டி அகடமியின் இணைத்தலைவர் அன்புதம்பி மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது: அகடமி சார்பில், மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு 1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதன் மூலம் 62 அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், 6 அரசு பொறியியல் கல்லூரிகளிலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தேர்வு செய்யப்படும் 5,000 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு பயிற்சியாளர்கள் ஒப்பந்தத்தின் பேரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இன்றைய உலகில் வேலை வாய்ப்பு போட்டிகள் என்பது தேசிய அளவில் இருக்கும். இதை மாணவர்கள் எதிர்கொள்ள தங்கள் கல்வி, மென்திறன், தனித்திறன் அனைத்தையும் மேம்படுத்திக்கொள்வது இன்றியமையாதது.
இந்த வாயப்பை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்ப திறன் என்ற பிரிவுகளின் கீழ் நடப்பு ஆண்டில் 220 மணி நேரம் இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதன் மூலம் 62 அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், 6 அரசு பொறியியல் கல்லூரிகளிலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தேர்வு செய்யப்படும் 5,000 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு பயிற்சியாளர்கள் ஒப்பந்தத்தின் பேரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இன்றைய உலகில் வேலை வாய்ப்பு போட்டிகள் என்பது தேசிய அளவில் இருக்கும். இதை மாணவர்கள் எதிர்கொள்ள தங்கள் கல்வி, மென்திறன், தனித்திறன் அனைத்தையும் மேம்படுத்திக்கொள்வது இன்றியமையாதது.
இந்த வாயப்பை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்ப திறன் என்ற பிரிவுகளின் கீழ் நடப்பு ஆண்டில் 220 மணி நேரம் இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.