Pages

Monday, February 25, 2013

டி.இ.டி தமிழ் வினா - விடை: இசையமுது, பழமொழி நானூறு

*  எழுதியவர் - பாரதிதாசன்

*  இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
*  சிறப்பு பெயர் - புரட்சிக்கவிஞர், பாவேந்தர்.

*  காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)

பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்

திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.

*  படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.

*  கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.

*  கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.

*  இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.

*  பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.

*  யார் மீது கொண்ட காதலால் தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார் - பாரதியார் மீது கொண்ட காதலால்

**  பொருள்: பொடி - மகரந்தப்பொடி, வானப்புனல் - வானத்து நீர்(மழை நீர்), தழையா வெப்பம் - பெருகும் வெப்பம், குறையாத வெப்பம், தழைக்கவும் - குறையவும்.

பழமொழி நானூறு:

*  ஆசிரியர் - முன்றுறை அரையனார், முன்றுறை - ஊர்ப்பெயர், அரையன் - அரசனைக் குறிக்கும் சொல்.

*   பழமொழியில் உள்ள பாடல்கள் - 400

* *  பொருள்:

ஆற்றுணா வேண்டுவது இல் -"கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்"

ஆற்றுணா - வழிநடை உணவு(கட்டுச்சோறு)

குறிப்பு: ஆறு - ஒர் எண்(6), ஆறு - நதி, ஆறு - வழி.

ஜவர்கர்லால் நேரு:

*  நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவர்கர்லால் நேரு

*  நேருவின் துணைவியார் பெயர் - கமலா

*  தாகூர் ஆரம்பித்த விஸ்வபாரதி கல்லூரி மேற்குவங்கத்தில் சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ளது.

*  நேரு தன் மகள் இந்திரா காந்திக்கும் 42 ஆண்டுகள்(1922-1964) கடிதம் எழுதியுள்ளார்.

*  பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும் போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது.

*  நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ளது. நேரு விரும்பி படித்தது - ஆங்கில நூல்கள்.

*  போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய்

*  அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல்.

*  கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து.

*  இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி.

*  தழை என்பதன் பொருள் - செடிகொடி.

** குறிப்பு:

*  சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.

*  மில்டன் - ஆங்கில கவிஞர்.

*  பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர்.

*  காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்).

*  டால்ஸ்டாய் - இரஸ்ய நாட்டு எழுத்தாளர்(போரும் அமைதியும் நாவல் - உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார்.

*  பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்.

*  பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர், கல்வியாளர்(நேருவுக்கு மிகவும் பிடித்த கல்விச் சிந்தனையாளர்).

*  கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.

*  நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில்  அதிகம் கூறியது - நூல்கள் பற்றி.

** குறிப்பு: உலகம் - ஞாலம், புவி - பூமி. முகில் - எழில், கொண்டல் - மேகம், மன்னன் - வேந்தன், கொற்றவன் -அரசன்.

இலக்கணம்:

*  ஓளியை உணர்த்தும் சொற்கள் இரண்டு இரண்டாக சேர்த்து வருவது, பிரித்தால் பொருள் தராது.

எ.கா: கண கண, சல சல, தணதண, பட பட, குடுகுடு, வளவள, பளபள.

*  சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள், இவர்கள் உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிப்பட்டவர்கள்.

*  "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச் சித்தர்.

*  உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் -கடுவெளிச் சித்தர்.



** பொருள்:

*  சித்து - அறிவு

*  கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54.

*  நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் என்ப் பாடியவர் - கடுவெளிச் சித்தர்.

*  பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகினிச் சித்தர் - இவை காரணப்பெயர்கள்.

** பொருள்:

*  வேம்பு - கசப்பான சொற்கள்.

*  வீறாப்பு - இருமாப்பு, கடம் - உடம்பு. சாற்றும் - புகழ்ச்சியாக்ப் பேசுவவது.

*  கவிஞர் அப்துல் ரகுமானின் "ஆலா பனை" என்னும் நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.

*  இவரின் பிற படைப்புகள்- சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.

*  புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் - கவிக்கோ அப்துல்ரகுமான்.

*  தாகம் என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது -பால் வீதி

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.