மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
திருமங்கலம் செல்டன் நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. ஆனால், 6, 7, 8ம் வகுப்புக்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கு அங்கீகாரம் பெறவில்லை.
இதையடுத்து, திருமங்கலம் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆஷா மற்றும் அதிகாரிகள், நேற்று பள்ளியில் ஆய்வு செய்தனர். பின், 45 மாணவ, மாணவிகளின் மாற்றுச் சான்றிதழ்களை, பெற்றோர் சம்மதத்தோடு பெற்று, திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி, அரசு ஆண்கள் பள்ளியில் சேர்த்தனர்.
கல்வி அலுவலர் ஆஷா கூறுகையில், "மீண்டும் பள்ளி நிர்வாகம் இதே போல் தொடர்ந்து செயல்பட்டால், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.