Pages

Friday, February 1, 2013

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பிப்ரவரி 26-ல் உண்ணாவிரதம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் 26-ம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது. திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின்
மாவட்ட செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. திருவெறும்பூர் ஒன்றியத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதியில் ரூ.33 லட்சம் கையாடல் செய்யப்பட்ட தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு மருத்துவ உதவித் தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு சங்க ஆலோசனைக் குழுத் தலைவர் முத்துவேலு தலைமை வகித்தார். மாநகரச் செயலர் கோபாலகிருஷ்ணன், மாநிலச் செயலர் போ. ஆதிகுருசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.