பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 13 மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டு கட்டமாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி 1 முதல் 8 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 9 முதல் 16 ஆம் தேதி வரையிலும் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள 406 பள்ளிகளில் 300 பள்ளிகளில் செய்முறைத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்திலிருந்து இந்த ஆண்டு 51,604 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 30,013 மாணவ, மாணவியர் செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
சென்னையில் உள்ள 406 பள்ளிகளில் 300 பள்ளிகளில் செய்முறைத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்திலிருந்து இந்த ஆண்டு 51,604 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 30,013 மாணவ, மாணவியர் செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.