அனைத்து தரப்பினரும் உயர்கல்வி பெரும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது," என, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் உள்ள தனியார் பல்கலை.,யில் நடந்த விழாவில், அவர் பேசுகையில், "தமிழகத்தில் உயர்கல்வி மேம்படுத்தும் முயற்சியில், அரசு ஈடுபட்டு வருகிறது. நகர்புறங்களுக்கு இணையான கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைத்திட, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கலை, அறிவியல், பாலிடெக்னிக் உட்பட 92 புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன.
50க்கு மேற்பட்ட புதிய பாடங்களும், 299 புதிய பாடத்திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 2,200 கல்லூரிகளும், விளையாட்டு, கல்வியியல் உட்பட 14 பல்கலை கழகங்களும் செயல்பட்டு வருகிறது சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் உயர்கல்வி பெரும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
50க்கு மேற்பட்ட புதிய பாடங்களும், 299 புதிய பாடத்திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 2,200 கல்லூரிகளும், விளையாட்டு, கல்வியியல் உட்பட 14 பல்கலை கழகங்களும் செயல்பட்டு வருகிறது சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் உயர்கல்வி பெரும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.