Pages

Monday, January 28, 2013

1 கோடி மாணவர்கள் விவரம் இணையதளத்தில் பதிவு பிப்.15 வரை அவகாசம் - பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

தமிழகம் முழுவதும் உள்ள 1.33 கோடி பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதியுடன் முடிகிறது. இதை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்ய பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள
அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரங்களை உள்ளடக்கி கல்வி நிர்வாக தகவல் கட்டமைப்பை உருவாக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த தகவல்களின் அடிப்படையில் பல திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக மாணவர்களின் பெயர், வகுப்பு, பிரிவு, தாய், தந்தை பெயர், வீட்டு முகவரி, தந்தையின் தொழில், குடும்ப வருமானம் என பல விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த பணி கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ள பிரத்யேக இணையதளத்தில் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.மின்வெட்டு பிரச்னை, மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து தாமதமாக கடிதங்களை பெற்றது போன்ற காரணங்களால் தனியார் பள்ளிகளில் பணிகள் முடியாத நிலை இருப்பதால், கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பு செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆரம்பத்திலேயே இறுதியான தேதியை தெரிவித்தால் பணிகளை முடிக்காமல் இருந்து விடுவர். இதனால் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவித்தோம். ஆனால் பல பள்ளிகளில் பணிகள் முடியாமல்
இருப்பதாக எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே கால அவகாசத்தை பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம். இது குறித்த அறிவிப்பு மாத கடைசியில் பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.