Pages

Monday, December 31, 2012

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் பட்டினிப் போராட்டம்

 
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் இன்று (29.12.2012) காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் அருகில் ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.
இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், ஆசிரியர்கள் பணிக்கு புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதி தேர்வை உடனே ரத்து செய்து பழைய நடைமுறையிலேயே பணி வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஆரம்ப ஊதிய விகிதம் 5200 என்பதை 9300 என நிர்ணயித்து நடைமுறைபடுத்த வேண்டும் என்பது போன்ற தங்களின் 22 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஒட்டுமொத்தமாக குரலெழுப்பினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.