Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 18, 2012

    ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்கக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்குவதோடு, மத்திய அரசைப் போல குறைந்தபட்ச போனசாக ரூ.3500-ஐ மாநில அரசும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்மாநிலம்முழுவதும் திங்கள்கிழமையன்றுஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன், செயலாளர் சி.கோவிந்தசாமி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் எம்.சி.சக்திவேல், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கருப்பையா, சில அளவைத்துறை சார்பில் சங்கர் உள்ளிட்டோர் பேசினர்.
    ஆர்ப்பாட்டத்தில் ஊதியக்குழு, ஒரு நபர் குழு ஆகியவற்றின் குறைபாடுகளைக் களையக்கோரி அமைக்கப்பட்ட மூவர் கொண்ட குறை தீர்க்கும் குழு அறிக்கையினை உடனடியாகக் வெளியிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  தொகுப்பூதிய, மதிப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட துணைத் தலைவர் தி.நடராஜன் நன்றி கூறினார்.

    No comments: