To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Pages
▼
Saturday, December 22, 2012
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை நடந்த அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிவு.
அரசு
மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கு இதுவரை நடந்த அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன.
நாளை முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்
உள்ளிட்டவையில் 1 கோடியே 32 லட்சம் மாணவ மாணவியர் படிக்கின்றனர். இவர்களில்
1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முப்பருவ முறை இந்த
ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி தற்போது இரண்டாம் பருவத் தேர்வுகள்
நடக்கின்றன(அரையாண்டுத் தேர்வு) இந்த தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத்
தேர்வாக நடத்தப்படுகிறது. அவர்களை பொறுத்தவரை இந்த தேர்வு ஜனவரி 10ம் தேதி
வரை நடக்கும். இதற்கிடையே நாளை முதல் ஜனவரி 2ம் தேதி வரை கிறிஸ்துமஸ்
பண்டிகை அறிவிக்கப்படுவதால் விடுமுறை முடிந்தும் இவர்கள் தேர்வு எழுத
வேண்டும். 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்றுடன்
தேர்வுகள் முடிவதுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை ஜனவரி 1 வரை
அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும்
பள்ளிகள் திறக்கப்பட்டு 3ம் பருவம் தொடங்குகிறது.
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.