Pages

Friday, August 31, 2012

பள்ளி வாகன புதிய விதிமுறைகள் : முதல்வர் ஆ‌லோசனை

பள்ளி வாகன புதிய விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டையின் வழியாக கீழே விழுந்து பலியானார்.
சென்னை ஐகோர்ட், தாமாகவே முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதற்கு பிறகு, பள்ளி வாகன புதிய விதிமுறைகளை வகுக்க தமிழக அரசிற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக, மாநில அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும், அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு நேற்று கோர்ட் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆ‌லோசனைக் கூட்டம் ந‌டைபெற்று வருகிறது. போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.