சமச்சீர் கல்வி முறை அமலால், மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் ஒன்றாம்
வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அமலானது. இந்த
முறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம்
அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு மற்றும்
நகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருவதாக
அதிகாரிகள் கூறினர்.
இதுதொடர்பாக பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர்
குணசேகர் கூறுகையில், கடந்த ஆண்டுகளில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை
மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டினர்.
சமச்சீர் கல்வி முறை அமலால் அரசு மற்றும்
மெட்ரிக் பள்ளிகளில் ஒரேமுறையான பாடதிட்டம் என்பதால், பெற்றோர் பலர் தங்கள்
குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வந்துள்ளனர். இனிவரும் காலங்களில்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் மேலும் அதிகரிக்கும் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.