Pages

Sunday, June 10, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு : தமிழ் வினா-விடை.

தமிழகத்தில் ஜூலை 12ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில் தற்போது தமிழ் பாடத்திற்கான தொடர் மாதிரி வினா விடைகள்...
*  தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை -  கலிப்பா
*  ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
* சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்

* தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை
*  யசோதர காவியத்தின் ஆசிரியர் - வெண்ணாவலுடையார்
*  உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல்
"இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம்.
*  99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்
*  பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை -  11
*  "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
*  வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
*  உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்
*  திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்
*  காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.
*  மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் -  பாண்டியர்
*  தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை.
*  தொல்காப்பியம் -  முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.
*  தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது -  அகப்பொருள்.
*  பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்
*  நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் -  திருப்புளி ஆழ்வார்.
*  சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி
*  சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
*  "வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.
*  தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
*  புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை
*  மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா
*  ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
*  மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி
*  சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து
*  தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்
*  இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்
*  இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்
*  அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன
*  தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்
*  சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்
*  காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
*  காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை
*  மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை
*  மணிமேகலையில் உள்ள காதைகள் - 30 காதைகள்
*  மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி - அறவண அடிகள்
*  மணிமேகலை நூல் அமைந்துள்ள பா - அகவற்பா
*  மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்
*  தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்
*  திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்
*  சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) - மணிமேகலை
*  சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
*  வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்
*  தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
*  "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்
*  "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை
*  "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.
*  "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.
*  திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்
*  தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ
*  மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்
*  தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை
*  சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.
*  சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.
*  சங்கங்கள் தமிழ் வளர்த்தன.
*  களவியலுரை என்பது ஒர் உரைநூல்.
*  களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்
*  களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்
*  பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
*  பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி
*  பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.
*  மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை
*  முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.
*  தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை
*  உலா நூல்களுள் மிகப் பழமையைனது -  திருக்கைலாய ஞான உலா
*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா
*  கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்
*  ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
*  திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்
*  கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்
*  தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி
*  கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்
*  "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
*  "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி
*  "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்
*  திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
*  பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
*  கருடாம்சம்    - பெரியாழ்வார்
*  சுதர்சனம் - திருமழிசை
*  களங்கம் -  திருமங்கையாழ்வார்
காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
*  நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
*  அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
*  காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
*  அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்
*  சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
*  பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு
*  குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்
*  பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
*  திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்
*  சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் -  திருத்தக்கதேவர்
*  அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்
*  செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்
*  சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது
*  காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை
*  ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது
*  இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது
*  புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்
*  அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்
*  முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்
*  மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை
*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.