Pages

Friday, June 22, 2012

அரசு பள்ளிகளில் 185 கணினி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்ற கடந்த 2010ம் ஆண்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து 185 கணினி ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 185 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் நேற்று நடந்தது. பல்வேறு தடைகளுக்கு பின் இறுதியாக கடந்த மார்ச் மாதம் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
பள்ளிக்கல்வி இயக்குனர் தொழிற்கல்வி கலந்தாய்வு நடத்தி பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். தேர்வு செய்யப்பட்ட 185 கணினி ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேரலாம் என அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.