Pages

Friday, May 4, 2012

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை எண்ணிக்கை உயர்வு.



தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவ சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் 50 ஆக உள்ள சேர்க்கை எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்படும் என்றும், 100 ஆக உள்ள சேர்க்கை எண்ணிக்கை 150 ஆக உயர்த்த மருத்துவக் கவுன்சிலிடம் கோரப்படும் என்றும் அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் தற்போது 165 ஆக உள்ள மாணவ சேர்க்கை 250 ஆக அதிகரிக்கவும் அனுமதி கோரப்படும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.