தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் கேபிள் டிவி வழியாக புதிய அரசு கல்வி ஒளிபரப்புச் சேவையை துவங்க உள்ளது. இந்த தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு கல்வியை அளிக்கும் நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆர்வமுள்ள ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தினந்தோறும் 1 முதல் 12ம் வகுப்பு பாடத்திட்டங்களில் இருந்து பாடப்பகுதிகள் திறமை வாய்ந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட உள்ளது.
இதற்கான கல்வி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பணியில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில் ஆர்வமும், ஆனுபவமும் உள்ள ஆசிரியர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
It is very attractive and easy to understand the lessons from mass media.Thank u to our Government
ReplyDelete