Pages

Saturday, April 7, 2012

மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் சலுகை எதுவரை?

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிந்து விட்டதால், இலவச பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை, பஸ்களில் ஏற்றாமல், கண்டக்டர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக புகார்கள் வந்துள்ளன. சென்னையில், இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள், பஸ் கண்டக்டருடன் வாக்குவாதம் ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டன.

இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, அவர் கூறியதாவது: இலவச பஸ் பாஸ், ஓராண்டு காலத்துக்கு வழங்கப்படுகிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் மாணவர்கள், இலவசமாக பஸ்களில் பயணம் செய்யலாம்.
விடுமுறை நாட்களில், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்திற்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. இந்த ஆண்டுக்கான பயண அட்டையில், ஏப்., 30ம் தேதி வரை பயணச் சலுகையை மாணவர்கள் அனுபவிக்கலாம். அதை மீறி, கண்டக்டர்கள் தகராறு செய்வதாக உரிய புகார்கள் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.