அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 1,555 சிறப்பாசிரியர்களை நியமனம் செய்வதற்காக, 21 முதல், 28ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்படுகின்றன.
உடற்கல்வி ஆசிரியர், இசை, ஓவியம் மற்றும் தையல் ஆசிரியர்கள் 1,555 பேர், &'ரெகுலர்&' அடிப்படையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர்.
மாநில பதிவு மூப்பு அடிப்படையில், 7,058 பேரின் பட்டியலை, வேலை வாய்ப்பு இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பியுள்ளது.
இவர்களுக்கு, 32 மாவட்ட தலைநகரங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்க உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வையொட்டி, 23ம் தேதி மட்டும், இந்தப் பணிகள் நடக்காது என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.