

மாதம் 5000 ரூபாய் அடிப்படையில் பணிபுரியும் நிலையில், புறநகர் பகுதிகளில் இருந்து திருப்பூர், திருப்பூரில் இருந்து புறநகர் பகுதி பள்ளிகளுக்கு சென்றுவர அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.
சிறப்பு ஆசிரியர்களின் சிரமத்தை போக்கும் வகையில், கவுன்சிலிங் மூலம் மாவட்டம் முழுவதும் பணி அமர்த்தப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை அந்தந்த பகுதி பள்ளிகளில் பணியமர்த்த எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுக்குள் கலந்து, "மனம் ஒத்தமாறுதல்', அருகிலுள்ள பள்ளிகளுக்கு "பொது மாறுதல்' பெறும்வகையில் முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாறுதல் பெற விரும்பும் சிறப்பு ஆசிரியர்கள், திருப்பூர் பிஷப் உபகாரசாமி மெட்ரிக் பள்ளியில் வரும் மார்ச் 28ல் நடக்கும் இடமாறுதல் "கவுன்சிலிங்'கில் பங்கேற்று, இட மாறுதல் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.