


அவர்களில் இருந்து அதிக பதிவுமூப்பு உள்ள 1,734 பேரை தேர்வுசெய்ய வேண்டும். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை. சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த ஆசிரியர்கள் எப்போது தேர்வுபட்டியல் வெளியாகும்? பணிநியமன ஆணை கிடைக்கப் பெற்று, எப்போது ஆசிரியர் பணியில் சேரப்போகிறோம்? என்று தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் ஏனோ தேர்வு பட்டியலை வெளியிடாமல் காலம்தாழ்த்திக் கொண்டே செல்கிறது. நடப்பு கல்வி ஆண்டில் 56 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டசபையில் அறிவிக்கப்படுகிறது. 2011-2012-ம் கல்வி ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டதற்கே பணிநியமன ஆணை வழங்கப்படாத நிலையில் இத்தனை ஆயிரம் ஆசிரியர்களை எப்படி நியமிக்கப்போகிறார்கள்? என்பது ஆசிரியர்களின் கேள்வி.
நன்றி : தினத்தந்தி.
நன்றி : தினத்தந்தி.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.