தொடக்கக் கல்வி துறையின் சார்பில் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் தடையை நீக்கியது. அனைத்து சங்கங்களும்தடையை நீக்கக்கோரி வைத்த கோரிக்கையினையும் ஏற்று தொடக்கக் கல்வி துறையின் சார்ப்பில் தடையை நீக்கக்கோரி வழக்கு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் இவ்வழக்கு மதுரை உயர்நீதி மன்றகிளையில் எடுத்துக் கொள்ளப்பட்டு தடையை விலக்கியது.
மேலும்
1. மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் ஒன்றியம் தவிர மற்ற இடங்களில் கலந்தாய்வு நடைபெற தடையில்லை.
2. திருப்பரங்குன்றம் ஆசிரியர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு தனிவழக்காக தொடர்ந்து நடக்கும்.
3. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிலை பற்றி தொடக்ககல்வித் துறையின்பணி விதிகளில் திருத்தத்தினை செய்யஅரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.