பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிய வழக்கில், 8 வாரத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர் கல்வித்துறை, சுகாதாரத் துறை, வனத்துறை, உள்ளிட்ட துறைகளில் பனியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
மற்ற துறைகளில் இது தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், 8 வாரத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைச் செயலருக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.