Pages

Sunday, April 30, 2017

38 தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு

பள்ளி கல்வித்துறையில், 38 தலைமை ஆசிரியர்களுக்கு, டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

பள்ளி கல்வித்துறையில், வருவாய் மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அதிகாரிகளும், ஒன்றியம் வாரியாக, மாவட்ட கல்வி அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர். இதில், ௩௮ மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்கள், காலியாக உள்ளன. 
உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்கி, இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான உத்தரவு, சில தினங்களில் வெளியாக உள்ளது. அப்போது, மாவட்ட கல்வி அதிகாரிகள் பலர், மாற்றம் செய்யப்பட உள்ளனர். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.