Pages

Monday, March 13, 2017

கூச்சம் தவிர்!

ஒருவர், அறிமுகமில்லாத முன்பின் தெரியாத நபரிடம் பேச முற்பட்டாலும், அதனை தடுக்கும் உள்உணர்வே கூச்சம்! கைகுலுக்குவதில் இருந்து மைக் பிடிப்பது வரை, பலருக்கும், இன்று கூச்ச சுபாவம் வெளிப்படுகிறது. இதனால், பலர் தங்களுக்கான பிரகாசமான வாய்ப்புகளை இழக்கின்றனர்.


கூச்சத்தை போக்குவதற்கான வழிமுறைகள்:

* கூச்சம், அறிமுகமில்லாதவரிடம் 8 நிமிடங்கள் வரையும் அறிமுகமானவர்களிடம் 5 நிமிடம் வரையும் இருக்கும். அந்த நிமிடங்களை தைரியமாக தாண்டி விட்டால் கூச்சம் ஓடிவிடும்.

* கூச்சத்திற்கு அவரவரேதான் முழு முதற் காரணம். ஏனேனில் பிறக்கும் போதே யாரும் கூச்ச சுபாவத்துடன் பிறப்பதில்லை.

* கூச்சம் என்பது ஒருவகையில் பலர் தங்களின் சவுகரியத்திற்காக அவர்களே வளர்த்து கொள்ளும் குணம் என்கிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள்.

* ’நல்லவனாக இரு; ஆனால் நல்லவன் எனக் காட்டி கொள்ளாதே’ என ஒரு பொன் மொழி உண்டு. நல்லவன் என பெயர் எடுத்த பின்பு ஏதேனும் பேசினால் தப்பாக எண்ணுவார்கள் என எண்ணி பலர் தங்கள் கருத்துக்களை கூறுவதே இல்லை. இந்த எண்ணத்தை தகர்த்தெரிய வேண்டும்.

* கண்ணாடி முன் நின்று நமது கண்ணை நாமே நேருக்கு நேர் பார்த்து பேசிப் பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

* யாரையாவது சந்திக்க செல்வதற்கு முன்பு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? அவர் இப்படி பதில் சொன்னால், அடுத்து எப்படி பேச்சைக் கொண்டு செல்வது என வீட்டிலேயே பயிற்சி எடுத்து கொள்வது நலம்.

* வாசிப்புப் பழக்கம் கூச்சத்தைப் போக்கும். நிறைய வாசியுங்கள். தன்னம்பிக்கை புத்தகங்கள் தைரியத்தை கொடுக்கும்.

* பொது நிகழ்வுகளில் பங்கேற்பதும், பொறுப்பேற்று கொள்வதும் கூச்சம் போக்கும் நல்ல வழிகள்.

* குழுக்களிடம் பேசும் போதோ, மேடை ஏறும்போதோ நமக்கு முன் இருப்பவர்கள் நம்மைப் போல் சராசரி மனிதர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக, வாழ்க்கையில் தவறு செய்ய மட்டும் கூச்சப்படுங்கள். மற்ற விசயங்களில் கூச்சத்தை தூக்கி எறியுங்கள்! சிரமம் இன்றி எதுவுமில்லை; சிரமம் என்பது எதுவுமில்லை!

-மு.தென்னவன்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.