Pages

Thursday, March 16, 2017

சி.பி.எஸ்.இ., மாணவர்கள் திறனாய்வு தேர்வில் முன்னிலை!

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசின் சார்பில் உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக, தேசிய அளவில் இரண்டு கட்ட தேர்வுகள் நடக்கும். 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, முதல் கட்டமாக, மாநில அளவிலும்; அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, இரண்டாம் கட்டமாக, தேசிய அளவிலும் திறனாய்வு தேர்வு நடக்கும்.


இந்த ஆண்டுக்கான முதல் கட்ட தேர்வு, நவ., 5ல் தமிழகத்திலும்; நவ., 6ல் மற்ற மாநிலங்களிலும் நடந்தது. தமிழகத்தில், 6,580 பள்ளிகளைச் சேர்ந்த, 1.55 லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள், சில தினங்களுக்கு முன் வெளியாகின. அதில், 235 பேர், தேசிய தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பட்டியலில் முதல், 100 இடங்களில், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். மொத்த மாணவர்களில், சி.பி.எஸ்.இ., - மெட்ரிக் பள்ளி மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய தேர்வு, மே, 14ல் நடக்கிறது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.