மொபைல் போன், இன்டர்நெட்கட்டணத்தைக் குறைக்க, தொலை தொடர்புஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்'அதிரடி திட்டம் வகுத்துள்ளது. நாடு முழுவதும், 100 கோடி பேர்மொபைல் போன்கள் பயன்படுத்திவருன்றனர். அவர்களில், 20 கோடி பேர்,இன்டர்நெட் இணைப்பு உள்ள, 'ஆண்ட்ராய்டு'வகை போன்களை பயன்படுத்துகின்றனர்.எனினும், பெரும்பாலானோர், அதிககட்டணம் காரணமாக, இன்டர்நெட்உபயோகத்தை குறைத்து வருகின்றனர்.
மேலும், '3ஜி, 4ஜி' இன்டர்நெட்கட்டமைப்புக்கு, அதிக முதலீடு செய்ய,தனியார் நிறுவனங்கள் தயங்குவதால்,இன்டர்நெட் சேவையும் குறைவானவேகத்தில் கிடைக்கிறது. இது போன்றபிரச்னைகளை களைய, 'டிராய்'திட்டமிட்டுள்ளது. அதன்படி, பொதுஇடங்களில், இன்டர்நெட் இணைப்பு பெறபயன்படும், 'வை - பை, ஹாட் ஸ்பாட்'மையங்களின் எண்ணிக்கையைஅதிகரிப்பதற்காக, சிறு நிறுவனங்கள்மற்றும் தொழில் முனைவோருக்கு,உரிமங்கள் வழங்க முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம், இரண்டு காசு கட்டணத்தில்,ஒரு, 'எம்.பி., டேட்டா' கிடைக்கும். தற்போது, 10காசு செலவிட வேண்டியுள்ளது. மேலும், 'வை- பை' இணைப்பு கிடைக்க, தற்காலிக, 'பாஸ்வேர்டு' பெற வேண்டியுள்ளது. புதியதிட்டத்தில், இது போன்ற சிக்கல்கள்இருக்காது. இத்திட்டத்தால், கட்டணம்குறைவதுடன், மொபைல் நிறுவனங்களின்வழக்கமான இன்டர்நெட் சேவையில் உள்ளநெரிசல் குறைந்து, சேவையின் தரம் கூடும்.மேற்கண்ட பரிந்துரைகளுக்கு, மத்திய அரசுஒப்புதல் அளிக்கும் என, தெரிகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.