மத்திய அமைச்சரவை கூட்டம் துவங்கியது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த அகவிலைப்படி உயர்வு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வால் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேலும் ஐ.ஐ.டி. சட்ட திருத்த மசோதாவிற்கும் கூட்டத்தில் ஓப்புதல் அளித்துள்ளது. பொதுத்துறை தனியார் பங்களிப்புடன் ஐ.ஐ.டி நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 50 கேந்திரிய வித்யாலயா அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.