Pages

Saturday, March 11, 2017

10ம் வகுப்பு தேர்வில் ’சென்டம்’ தர கட்டுப்பாடு

பத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம், வரும், 31ல் துவங்கி, ஏப்., 12ல் முடிகிறது. ’சென்டம்’ வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 8ல் துவங்கியது; வரும், 28ல் முடிகிறது. 


தமிழ் அல்லாத, பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, வரும், 30ல், விருப்ப மொழி தேர்வு நடக்கிறது. விடைத்தாள் திருத்தத்தை, வரும், 31ல் துவக்கி, ஏப்., 12க்குள் முடிக்க, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. 

’மொழி பாடங்களில், சென்டம் வழங்கும் முன், தலைமை முகாம் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். ’முக்கிய பாடங்களுக்கு, சென்டம் பெறும் விடைத்தாள்களை, மறு ஆய்வு செய்த பின்னே, மதிப்பெண் இறுதி செய்யப்பட வேண்டும்’ என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.