Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 2, 2017

    பட்ஜெட் -2017-18 முழு விவரம்!!

    மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் விவரம்:
    -பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அருண் ஜேட்லி
    -சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார் ஜேட்லி
    -நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது
    -ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெருவோருக்கான வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக குறைப்பு

    -ரூ. 3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி விலக்கு
    -வருமான வரி சலுகையால் அரசுக்கு ரூ.15500 கோடி வருவாய் இழப்பு
    -வருவாய் இழப்பை ஈடு செய்ய அதிக ஊதியம் பெறுவோருக்கு அதிக வரி
    -ஆண்டு வருவாய் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலுள்ளவர்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி-ஜேட்லி
    -தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை
    -ரூ.250000 முதல் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி
    -தற்போது இந்த பிரிவினருக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது
    -தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கமாக இருக்கும்
    -அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஜேட்லி அதிரடி அறிவிப்பு
    -அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ஒரு மூலத்திடமிருந்து ரூ.2000 மட்டுமே நன்கொடை பெற முடியும்
    -அரசியல் கட்சிகள் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில்தான் பெற வேண்டும்
    -ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும்
    -கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை
    -அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் விலக்கு
    -ரொக்கமாக ரூ.
    3 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் பணம் எடுக்க தடை
    -ஊழலுக்கு எதிரான சிறப்பு விசாரணை குழு இப்பரிந்துரையை செய்தது
    -இந்த பரிந்துரையை அரசு ஏற்கிறது; இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்
    -2015-16ல் மொத்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்துள்ளது
    -ரூ. 50 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுகக்கான வருமான வரி 30%ல் இருந்து 25% ஆக குறைக்கப்படும்
    -ஆண்டுக்கு 50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் நடைபெறும் சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி குறைப்பு
    -6.94 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி செலுத்துகின்றன
    -இதில் 96 சதவீத நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள்தான்
    -சிறு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு வரி குறைப்பு உதவும்
    -கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான்
    -கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான்
    -பண மதிப்பிழப்பால் அட்வான்ஸ் வருமான வரி கட்டுவது 34.8% அதிகரித்துள்ளது
    -இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது
    -3.7 கோடி தனி நபர்களில் வருமான வரி தாக்கல் செய்தோர் 97 லட்சம் பேர் குறைந்த வருவாய் பிரிவினர்
    -52 லட்சம் பேர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்கள்
    -1.72 லட்சம் பேர் மட்டுமே 50 லட்சத்துக்கு மேல் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளனர்
    -பணமதிப்பிழப்புக்கு பிறகு இந்த வரி ஏய்ப்பு அம்பலமானது
    -1.09 கோடி வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் சராசரி மதிப்பு 5.3 லட்சம்
    -8 லட்சத்துக்கு மேல் 1.48 லட்சம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது
    -நாட்டில் பெரும்பாலானவர்கள் வருமான வரியே கட்டுவதில்லை. இதனால் நியமாயமாக வரி கட்டுவோர் மீது சுமை கூடுகிறது
    -2017-18ல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்
    -கடந்த ஆண்டில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிததி ரூ. 4.11 லட்சம் கோடி
    -பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 2.74 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்
    -2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் மொத்த செலவீனங்கள் ரூ. 21.47 லட்சம் கோடியாக இருக்கும்
    -மொத்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி
    -தலைமை தபால் நிலையங்கள் பாஸ்புக் அலுவலக பணிகளையும் மேற்கொள்ளும்
    -பாதுகாப்பு படையினர் போக்குவரத்து டிக்கெட் எடுக்க தனி வசதி ஏற்படுத்தப்படும்
    -மத்திய எண்ணெய் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்க திட்டம்
    -பல்கலைக்கழக மானிய குழுவில் மாற்றம் கொண்டுவரப்படும்
    -வெளிநாடுகளுக்கு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் சொத்துக்கள் முடக்கப்படும்
    -குற்றவாளிகள் சொத்துக்களை முடக்க சட்டத்திருத்தம், தேவைப்பட்டால் புது சட்டம்-ஜேட்லி
    -ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.2லட்சத்து 74 ஆயிரத்து 114 கோடி-ஜேட்லி
    -இதில் ராணுவ ஓய்வூதிய செலவீனங்கள் சேர்க்கப்படவில்லை-ஜேட்லி
    -வறட்சியை சமாளிக்க புதிதாக 5 லட்சம் குளங்கள் வெட்டப்படும்
    -செக் மோசடிகளை தவிர்க்க மாற்றுமுறை ஆவணச் சட்டத்தில் திருத்தம்
    -உர விற்பனை நிலையங்கள், கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை
    -ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை திட்டம் அறிமுகம்
    -மொபைல் வாலட், டெபிட் கார்டுகள் இல்லாதவர்களுக்காக இத்திட்டம்
    -இந்த நிதியாண்டில் 2500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இலக்கு
    -பிரதமர் மோடியின் குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் புதிதாக 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்
    -தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்துக்கு ரூ. 64,000 கோடி ஒதுக்கீடு
    -புதிய அன்னிய முதலீட்டுக் கொள்கை கொண்டு வரப்படும்
    -போக்குவரத்து துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2,41,387 கோடி
    -நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும்
    -உள்கட்டமைப்பு துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,96,135 கோடி
    -100 திறன் மேம்பாட்டு மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் - அருண் ஜேட்லி
    -மூத்த குடிமக்களுக்கு 8% வருவாயுடன் எல்.ஐ.சி திட்டம் - அருண் ஜேட்லி
    -மருத்துவ மேற்படிப்புகளில் 5000 சீட்கள் அதிகரிக்கப்படும்
    -அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம் (Foreign Investment Promotion Board) மூடப்படும்
    -கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராண்ட் பேண

    No comments: