கூடலுார், இரண்டாவது மைல், அரசு துவக்கப் பள்ளியில், ’ஸ்மார்ட் கிளாஸ்’ மூலம், மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்த, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில பள்ளிகளில், ’ஸ்மார்ட் கிளாஸ்’ மூலம், மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடுகின்றன.
அதில், கூடலுார், இரண்டாவது மைல் பகுதியில் உள்ள, ஊராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்று. பள்ளியில், ஆறு கம்ப்யூட்டர்கள், புரொஜெக்டர்கள் அமைத்து, எளிதாக புரியும் படி சொல்லித் தரப்படுகிறது.
தலைமை ஆசிரியர் நிர்மலாதேவி கூறுகையில், ”மாணவர்களுக்கு, தேவையான உபகரணங்களை, அரசு இலவசமாக வழங்குகிறது. கற்பிக்கும் முறையை எளிதாக்க, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; மாணவர்கள், ஆர்வமாகவும் கற்று வருகின்றனர்,” என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.