Pages

Tuesday, January 31, 2017

இன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது!

வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், கல்வி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க, அரசு பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ளது. 

பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க, பள்ளிக்கல்வித் துறையிலும், கல்லுாரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்திலும், கல்வி கட்டண கமிட்டிகள் செயல்படுகின்றன.இந்த கமிட்டிகள், பள்ளி, கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு,மாணவர் எண்ணிக்கை, பாடத்திட்டம், கூடுதல் வசதிகள் அடிப்படையில், கட்டணம் நிர்ணயிக்கிறது. வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், தற்போதுள்ளதை விட, அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதற்கான, கட்டண நிர்ணய பணி துவங்கி உள்ளது.

அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், முதுநிலை அறிவியல் படிப்பு நடத்தும் கலை, அறிவியல் கல்லுாரிகள், தங்கள் விண்ணப்பங்களை, பிப்., 28க்குள் அனுப்புமாறு, சுயநிதி கல்லுாரிகள் கட்டண நிர்ணய கமிட்டி அறிவித்துள்ளது. 'புதிய கட்டணம், மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்' என, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.