கோவையில், 1,800க்கும் மேற்பட்ட, அரசுப் பள்ளிகள் உள்ளன. இங்கு, அலுவலக கோப்புகள் கையாள, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அமைச்சு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவை எட்டியுள்ளது. இதனால், பணி நிரவல் கலந்தாய்வு மூலம், ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
ஆனால், பள்ளிகளில் உள்ள, அமைச்சு பணியாளர்கள் மட்டும், ஒரே பள்ளியிலே பணிப்புரிகின்றனர். சுண்டப்பாளையம், தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு பள்ளிகளில், ஐந்துக்கும் மேற்பட்ட, அமைச்சு பணியாளர்கள் பணிப்புரிகின்றனர்.
இவர்களை, உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில், காலியாக உள்ள அமைச்சுப் பணியாளர் இடங்களுக்கு, பணி நிரவல் செய்தால், பணிப்பளுவை சமாளிக்க உதவியாக இருக்கும் என, அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க உறுப்பினர்கள் கூறுகையில், ’கிணத்துக்கடவு, மதுக்கரை மற்றும் நகர உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்களில், பத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள், மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதனால், நலத்திட்ட பொருட்கள் வினியோகித்தல், தேர்வு சமயங்களில், அதிக பணிச்சுமை ஏற்படுகிறது.
எனவே, பள்ளிகளில் கூடுலதாக உள்ள அமைச்சு பணியாளர்களை, உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு பணிநிரவல் செய்ய வேண்டும். இதை, வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள, அலுவலர்களுக்கான கலந்தாய்வில் நடைமுறைப்படுத்தினால், பணிகள் விரைந்து முடிக்க, உதவியாக இருக்கும்,’என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.