Pages

Monday, December 5, 2016

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு லீவ்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டதை அடுத்து, சென்னையில் பாதுகாப்பு கருதி சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.


விப்ரோ, டிசிஎஸ், கார்பினிசான், டைம்லர் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாய்மொழியாக விடுமுறை அறிவுத்துள்ளன. சில தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதே போன்று சென்னையில் பாதுகாப்பு கருதி கூடுதலாக 2 ஐஜி.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்து 1500 துணை ராணுவப்படையினர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.