Pages

Monday, December 5, 2016

பள்ளிகளுக்கு அருகில் தின்பண்ட கடைகளுக்கு தடை

பள்ளிகளுக்கு அருகில் சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு, முற்றிலும் துாய்மையாக சமைக்கப்பட வேண்டும்.


அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள், துாய்மையான நீரில் சுத்தம் செய்யப்பட வேண்டும். சமையல் கூடம், உணவு அருந்தும் இடத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

மதிய உணவை, துாய்மையான முறையில் வினியோகம் செய்ய வேண்டும். மாணவர்கள் உணவு அருந்தும் தட்டு, டம்ளர் போன்றவற்றை, கழுவி சுத்தமாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். உணவு சமைத்தல் மற்றும் பரிமாறும் முறைகளை, தலைமை ஆசிரியர், தினமும் கண்காணிப்பது அவசியம். 

விழா நாட்களில், தன்னார்வ நிறுவனங்கள் வெளியிலிருந்து கொண்டு வரும், உணவின் தரத்தை சோதித்த பின்பே, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.பள்ளி வளாகத்திற்கு அருகில் விற்கப்படும், சுகாதாரம் இல்லாத தின்பண்டங்களை உண்ணக் கூடாது என, மாணவர்களுக்கு, தினமும் அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளின் முன், சுகாதாரமற்ற உணவு விற்கும் கடைகளை அனுமதிக்க கூடாது; முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.