Pages

Saturday, November 5, 2016

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு விலக்கு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு நாளை (நவ.,6) ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கிறது.இதே நாளில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு பணியில் பங்கேற்கவும் அவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. கல்வி அதிகாரிகளுடன் கலெக்டர் வீரராகவ ராவ் ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து, காலை தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்தல் வகுப்பில் பங்கேற்க வேண்டாம். அதற்கு பதில், தேர்வு பணி முடிந்த பின் அருகே உள்ள மையங்களில் மதியம் 2:30 மணிக்கு நடக்கும் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.