Pages

Tuesday, November 29, 2016

மின்னணு வாழ்வுச் சான்றிதழ் பெற "பான்' அவசியம்

மின்னணு வாழ்வுச் சான்றிதழை இணைய சேவை மையங்களில் பெறும்போது, நிரந்தர கணக்கு எண் அவசியம் (பான் அட்டை எண்) என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது வாழ்வுச் சான்றிதளை, சம்பளம் அளிக்கும் கருவூலத்திலோ அல்லது வங்கியிலோ செலுத்த வேண்டியது அவசியமாகும்.


இந்த நிலையில், இச்சான்றிதழை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இணைய சேவை மையங்களிலும் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு மின்னணு வாழ்வுச் சான்றிதழைப் பெற விரும்புவோர் தங்களது நிரந்தர கணக்கு எண்ணை (பான் அட்டை) எடுத்துச் செல்ல வேண்டும். வாழ்வுச் சான்றிதழை பெறும் போது இந்தக் கணக்கு எண் அவசியம் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.